» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அம்ரித் பாரத் ரயில்: கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிப்பு? பயணிகள் அதிருப்தி!
திங்கள் 9, மார்ச் 2026 5:44:32 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்ரித் பாரத் ரயில்களில், மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்படுவதாகப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம் - தாம்பரம் மற்றும் நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி ஆகிய மூன்று வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், நாகர்கோவில் - மங்களூரு ரயிலுக்கு (16329/16330) ரயில்வே வாரியம் சார்பில் கேரள மாநிலத்தின் தலசேரி, சாஸ்தான்கோட்டை மற்றும் வடகரா ஆகிய மூன்று நிலையங்களில் புதிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிறுத்தங்கள் மார்ச் 3 (நாகர்கோவிலில் இருந்து) மற்றும் மார்ச் 4 (மங்களூருவில் இருந்து) முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளன. கேரளாவில் சிறிய நிலையங்களுக்குக் கூட நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய ரயில் நிலையங்களான இரணியல் மற்றும் குழித்துறை ஆகியவற்றுக்கு அம்ரித் பாரத் ரயில்களில் நிறுத்தம் வழங்கப்படவில்லை.
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரயிலுக்கும் இரணியலில் நிறுத்தம் இல்லை.ஏற்கனவே திருநெல்வேலி - ஜாம்நகர் ரயிலுக்கு, குழித்துறையை விட வருவாய் குறைந்த கேரளாவின் பாறசாலை நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டு, குழித்துறை புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லிக்குச் சென்று ரயில்வே வாரிய அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து, வருவாய் மற்றும் புள்ளிவிவர ஆதாரங்களுடன் வாதிட்டுத் தங்கள் தொகுதிகளுக்குத் தேவையான நிறுத்தங்களைப் பெற்று வருகின்றனர். "வெறுமனே கோரிக்கை மனுக்களை அளிப்பதோடு நின்றுவிடாமல், கேரளா எம்.பி.க்களைப் போல கன்னியாகுமரி எம்.பி.யும் தீவிரமாகப் போராடி, ரயில்வே வாரியத்திடம் இருந்து புதிய நிறுத்தங்களுக்கான ஆணையைப் பெற வேண்டும்" என மாவட்ட பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கல்: 306 மது பாட்டில்கள் பறிமுதல்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:29:44 PM (IST)

தேர்வு முடிவு பயம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – பெற்றோர்கள் சோகம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:23:00 AM (IST)

சென்னை டூ நாகர்கோவில் நாளை சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:35:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

