» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை
சனி 7, பிப்ரவரி 2026 12:57:30 PM (IST)

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி புனித லசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, 11-ம் வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: "மாணவர்கள் தற்காலப் போட்டி உலகிற்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து, படிப்பில் கவனம் சிதறாமல் ஆசிாியர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். கல்வியே உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும் என்றார்.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய அமைச்சர், பள்ளிக்கு நவீனத் தொடுதிரை (Touch Screen) வசதியையும் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பள்ளி தாளாளர் பிரிட்டோ, தலைமையாசிரியர் ஜான்பால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)


ஆமா ஆமாFeb 7, 2026 - 01:19:25 PM | Posted IP 162.1*****