» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் வாலிபர் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு கிராமம் மடிச்சல் கீரங்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் ஆண் சடலம் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல்  அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர். 

பின்னர் சடலம் அரசு மருத்துவமனை குழித்துறைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த நபர் காட்டு விளை குழித்துறை பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த ஜெகன் என்பதும், அவர் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory