» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!

வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)



தேர்தல் நடத்தை விதிகளால் ஒட்டுமொத்த வணிகச் செயல்பாடுகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட வணிகர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பொதுமக்களும் வணிகர்களும் சந்தித்து வரும் சிரமங்கள் குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே. பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சுமார் ரூ. 30 லட்சம் தொகையும் பொதுமக்களுக்குச் சொந்தமானது. 

இவை வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள், மருத்துவச் செலவுகள் மற்றும் அவசரத் தேவைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்ட பணமே ஆகும் என அவர் தெரிவித்தார். தொடர் சோதனைகளால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் நிலவுகிறது. இதன் காரணமாக, சந்தைகளுக்கு மக்கள் வருவது குறைந்து, மாவட்டத்தின் ஒட்டுமொத்த வணிகச் செயல்பாடுகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதாகக் கவலை தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள ரூ. 50,000 வரை மட்டும் ரொக்கப்பணம் கொண்டு செல்லலாம் என்ற விதியைத் தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். இந்த வரம்பை இரண்டு லட்சம் ரூபாய் ஆக உயர்த்த வேண்டும். தேர்தல் ஆணையம் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று பண வரம்பை உயர்த்தாவிட்டால், வணிகர்களின் நலன் காக்க மாவட்ட அளவில் வணிகர்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்," என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory