» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15.03.2026 முதல் இன்று (26.03.2026) காலை 6:00 மணி வரையிலான சோதனையில் மொத்தம் ரூ.28,58,410 உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதற்காகக் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொகுதி வாரியான விவரங்களைப் பார்க்கையில், அதிகபட்சமாக குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் ரூ.8,69,150 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிள்ளியூர் தொகுதியில் ரூ.6,90,790-ம், விளவங்கோடு தொகுதியில் ரூ.5,49,370-ம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாகர்கோவில் தொகுதியைப் பொறுத்தவரை, நேற்று மாலை வரை ரூ.3,75,350 பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 மணி நேரச் சோதனையில் கூடுதலாக ரூ.55,050 பிடிபட்டுள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் மொத்தம் ரூ.4,30,400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, கன்னியாகுமரி தொகுதியில் ரூ.2,49,700-ம், பத்மனாபபுரம் தொகுதியில் ரூ.69,000-ம் இதுவரை பிடிபட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் இந்தப் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

