» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)


நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிப்பது குறித்த பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சி.எஸ்.ஐ பிஷப் வளாகத்தில் இயங்கி வருவது மார்டன் ஆங்கிலப்பள்ளி. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு விதைப்பந்துகள் தயாரிப்பது குறித்த பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமதி. எமிலி மேக்தலின் தலைமை தாங்கினார். இராமன்புதூர் கலுங்கல் ஜங்ஷன் பல் மருத்துவர் பெசன்ஜாஸ் முன்னிலை வகித்தார்.
 
சமூக நல ஆர்வலரும் ஒரு கோடி விதைப்பந்துகள் பிரச்சாரகருமான வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வளரும் குழந்தைகளிடையே விதைப்பந்துகள் செய்து வீச பெற்றோரிடம் கேட்டு மர விதைகள் கொண்டுவர வேண்டினார். குழந்தைகள் எப்படி விதைப்பந்துகள் செய்ய வேண்டும் என்றும் விளக்கினார். "விதைப்பந்துகளை தயக்கமின்றி செய்து எறிய வேண்டும். முளைத்தால் அவை மரம், முளைக்காவிட்டால் குமரி மண்ணுக்கு உரம்” என்று திருமாறன் குறிப்பிட்டார். 

இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "இந்திய பெருமை 2026” என்ற சான்றிதழ் வழங்கப்படுவதாக சம்பவர் வடகரை ஹரி அறிவித்தார். கூட்ட ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் பி. ஏ. ஜீவநாதன், முதல்வர் எமிலி மேக்தலின், டாக்டர். தமிழருவி மற்றும் அம்பை காந்திதாசர் செய்திருந்தனர். மேலும், பள்ளி, கல்லூரிகளில் விதைப் பந்துகள் செய்திட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட உதவிகளுக்கு 948755 9516 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory