» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிப்பது குறித்த பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சி.எஸ்.ஐ பிஷப் வளாகத்தில் இயங்கி வருவது மார்டன் ஆங்கிலப்பள்ளி. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு விதைப்பந்துகள் தயாரிப்பது குறித்த பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமதி. எமிலி மேக்தலின் தலைமை தாங்கினார். இராமன்புதூர் கலுங்கல் ஜங்ஷன் பல் மருத்துவர் பெசன்ஜாஸ் முன்னிலை வகித்தார்.
சமூக நல ஆர்வலரும் ஒரு கோடி விதைப்பந்துகள் பிரச்சாரகருமான வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வளரும் குழந்தைகளிடையே விதைப்பந்துகள் செய்து வீச பெற்றோரிடம் கேட்டு மர விதைகள் கொண்டுவர வேண்டினார். குழந்தைகள் எப்படி விதைப்பந்துகள் செய்ய வேண்டும் என்றும் விளக்கினார். "விதைப்பந்துகளை தயக்கமின்றி செய்து எறிய வேண்டும். முளைத்தால் அவை மரம், முளைக்காவிட்டால் குமரி மண்ணுக்கு உரம்” என்று திருமாறன் குறிப்பிட்டார்.
இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "இந்திய பெருமை 2026” என்ற சான்றிதழ் வழங்கப்படுவதாக சம்பவர் வடகரை ஹரி அறிவித்தார். கூட்ட ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் பி. ஏ. ஜீவநாதன், முதல்வர் எமிலி மேக்தலின், டாக்டர். தமிழருவி மற்றும் அம்பை காந்திதாசர் செய்திருந்தனர். மேலும், பள்ளி, கல்லூரிகளில் விதைப் பந்துகள் செய்திட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட உதவிகளுக்கு 948755 9516 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

