» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீட்டின் அருகில் மது குடித்ததைக் கண்டித்ததால் வாலிபர் கொலை: 3 மீன் வியாபாரிகள் கைது!
சனி 7, பிப்ரவரி 2026 8:47:52 AM (IST)
கோவில்பட்டியில் வீட்டின் அருகில் மது குடித்ததைக் கண்டித்ததால் வாலிபரை கற்களால் தாக்கிக் கொலை செய்த 3 மீன் வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவர், திருப்பூர் பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆவல்நத்தம் பாலம் அருகே அவர் மர்ம நபர்களால் கற்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்தார்.
விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான வேல்முருகன் (35), அசோக் குமார் (28) மற்றும் முனியசாமி (35) ஆகியோருக்கும் கார்த்திக்கிற்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று அவர்கள் கார்த்திக் வீட்டின் அருகே மது குடித்ததைக் கார்த்திக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மூவரும் அவரை செங்கற்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)


தமிழன்Feb 7, 2026 - 10:04:51 AM | Posted IP 104.2*****