» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!

வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)



வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் முன்னிலையில் இன்று (06.02.2026) தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து இன்று வடக்கு பச்சையாற்று நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் முழு கொள்ளளவில் நிரம்பியவுடன் தானாக நிரம்பி வழிந்தோடக்கூடிய கட்டுப்பாடற்ற வழிந்தோடி உள்ளது. இந்நீர்தேக்கத்தின் மூலம் மொத்தம் நாங்குநேரி வட்டத்திலுள்ள 33 கிராமங்கள் படைந்து வருகின்றன. வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து 1276.39 ஏக்கர் பாசனம் பெறும் நிலங்களுக்கு 06.02.2026 முதல் 31.03.2026 வரை 54 நாட்களுக்கு 51.06 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பிசான சாகுபடிக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

நீர்தேக்கத்தில் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன் பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் விநியோகப்பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, செண்பகநந்தினி, களக்காடு நகர்மன்ற தலைவர் சாந்தி சுபாஷ், துணைத்தலைவர் பி.சி.ராஜன், வட்டாட்சியர் பாலமுருகன், உதவி பொறியாளர்கள் விக்னேஷ், கிருஷ்ணமூர்த்தி, வெண்மதி வேந்தன், விஜயகணேஷ், முக்கிய பிரமுகர் கிராகாம்பெல் உட்பட அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory