» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:38:38 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி, குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வந்தார். தனது 2 மகன்களுக்கும் முடிகாணிக்கை செலுத்தினார்.பின்னர் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு ‘செல்பி’ எடுத்தனர்.
பின்னர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கை நிறைய கஷ்டங்களையும், போராட்டங்களையும் கொடுத்திருக்கிறது. அதை கடந்து மக்களின் அன்புதான் மனதில் நிற்கிறது. அடுத்து நடிக்கும் புதிய படங்கள் ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் படமாகவும், அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்கும்’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)


கடவுள் பக்தன்Feb 6, 2026 - 08:49:03 AM | Posted IP 162.1*****