» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!

வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:38:38 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி, குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வந்தார். தனது 2 மகன்களுக்கும் முடிகாணிக்கை செலுத்தினார்.பின்னர் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு ‘செல்பி’ எடுத்தனர். 

பின்னர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கை நிறைய கஷ்டங்களையும், போராட்டங்களையும் கொடுத்திருக்கிறது. அதை கடந்து மக்களின் அன்புதான் மனதில் நிற்கிறது. அடுத்து நடிக்கும் புதிய படங்கள் ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் படமாகவும், அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்கும்’ என்றார்.


மக்கள் கருத்து

கடவுள் பக்தன்Feb 6, 2026 - 08:49:03 AM | Posted IP 162.1*****

நடித்தால் நாடு முன்னேறுமா? பெட்ரோல் விலை குறையுமா ? அங்கு எவன் வந்தால் நமக்கென்ன? கடவுள் தான் பெரியவர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory