» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 29, ஜனவரி 2026 5:12:53 PM (IST)

தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,இன்று (29.01.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர்தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் ஊரகப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் எனவும், அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்தமிழ்நாடு சட்டப் பேரவையில் 24.01.2026 அன்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில்2025-2026 ஆம் ஆண்டில் கூடுதலாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்என அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2025-2026 ஆம் ஆண்டுக்கு 1000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இலவச பட்டா வழங்குதல் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஞானதாசபுரம் குக்கிராமம் மற்றும் அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பட்டையான் காலனி குக்கிராமங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனாதெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தோவாளை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், கருணாகரன், தோவாளை வட்டார உதவிப் செயற்பொறியாளர் கீதா,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணி மேற்பார்வையாளர்கள, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்மற்றும் ஊராட்சி செயலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

