» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!
புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)
மணக்குடியில் வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் மற்றும் பெண்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நாய் கடியால் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 333 பேர் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணக்குடியில் வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆனி ஆடிட், லிசி, அமலா மேரி, தங்கம், மேரி ஸ்டெல்லா ஆகிய பெண்கள் பலத்த காயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று குழந்தைகளுக்கு தலை மற்றும் முகத்தின் பல்வேறு இடங்களில் நாய் கடித்திருக்கிறது. மேலும் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணக்குடி மீனவ கிராமத்தில் தினமும் சுற்றி திரியும் தெரு நாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை என பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்தவிளை கடற்கரையில் கடல் உள்வாங்கியது!
புதன் 28, ஜனவரி 2026 5:55:38 PM (IST)

மடிக்கணினிகளை 2 தினங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
புதன் 28, ஜனவரி 2026 5:41:21 PM (IST)

இதுவரை 1,06,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்க கனவ சொல்லுங்க அட்டை : ஆட்சியர்..!
செவ்வாய் 27, ஜனவரி 2026 5:08:31 PM (IST)

கன்னியாகுமரியில் 77-வது குடியரசு தினவிழா: ஆட்சியர் அழகுமீனா தேசியக்கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:43:43 PM (IST)

பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!
ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

