» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)
நாகர்கோவிலில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், மீனம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஜான் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கூறினர். இதை நம்பிய அகஸ்டின்ஜான், நாகர்கோவிலில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து ரூ. 35 லட்சம், ரூ.15 லட்சத்துக்கு காசோலைகளை அளித்தார்.
இந்த பணத்துக்கு ரூ. 1 கோடியாக திருப்பி தருவதாக அவர்கள் கூறினர். ஆனால், அவர்கள் கூறியபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அகஸ்டின்ஜான் இதுகுறித்து நாகர்கோவில், வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார் அகஸ்டின்ஜானிடம் பணம் வாங்கி ஏமாற்றியது, கேரள மாநிலம் ஆற்றிங்கால் பகுதியைச் சேர்ந்த மோகனன் (65), குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள மேல்பாலையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், பந்தளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (65) என்பது தெரியவந்தது. வடசேரி காவல் நிலைய போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)

இளைஞரை திருமணம் செய்து ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி: இளம்பெண் மீது வழக்குப் பதிவு
புதன் 5, நவம்பர் 2025 5:38:12 PM (IST)


.gif)