» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)
இயற்கை வளப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பசுமைப் பயணம் மிதிவண்டிப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது.
தமிழக துறவியர் பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப் (AICUF) மற்றும் சூழலியல் இயக்கங்களின் கூட்டு ஒருங்கிணைப்பில் இயற்கையைக் காப்போம், வாழ்வுரிமையை மீட்போம்" என்ற முழக்கத்துடன், சுற்றுச்சூழல் நீதி மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'பசுமைப் பயணம்' மிதிவண்டிப் பேரணி, நவம்பர் 5, 2025 முதல் நவம்பர் 20, 2025 வரை தமிழகத்தில் நடைபெறவுள்ளது.
இயற்கை அன்னையைக் காக்கவும், பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை செல்கிறது. 16 நாட்கள், 720 கி.மீ தூரம் கொண்ட இந்த விழிப்புணர்வுப் பயணத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்கும் நோக்கில், முக்கிய நகரங்கள் வழியாகப் பயணத் திட்டம் அமைந்துள்ளது. இந்தப் பசுமைப் பயணம் நவம்பர் 5-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய முக்கிய நகரங்கள் வழியாக பசுமை விழிப்புணர்வு நிகழ்வுகள், அடையாள அணிவகுப்புகள், விழிப்புணர்வு உரைகள், பசுமை உறுதிமொழி, கலாச்சார நிகழ்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொருட்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்தி நவம்பர் 20-ம் தேதி சென்னையில் நிறைவுறும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)

சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயிலை குமரி வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 3:26:54 PM (IST)

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்: எஸ்பி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:59:24 AM (IST)

கலிங்கராஜபுரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் பணிகள் : முதல்வர் துவக்கி வைத்தார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:34:07 PM (IST)


.gif)