» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ் இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது இந்த நிலையில் ஒருவரிடம் லஞ்ச பணம் பெறும்போது கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இன்று மாலை அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)


.gif)