» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)
குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை எடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகக் கடந்த 5 ஆண்டுகளில் 26 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை எடுத்து டிராவல் ஏஜென்சிகள் மற்றும் கணிணி மையங்கள் வாயிலாக முறைகேடாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. சமீபத்தில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சியில் சோதனை நடத்திய அதிகாரிகள், போலி கணக்குகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர் ரமேஷ் என்பவரைக் கைது செய்தனர்.
கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 26 பேர் இத்தகைய செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4 லட்சத்து 12 ஆயிரத்து 217 ரூபாய் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் 22 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60% வாக்குப்பதிவு: தொகுதி வாரியான முழு விவரம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கல்: 306 மது பாட்டில்கள் பறிமுதல்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:29:44 PM (IST)

தேர்வு முடிவு பயம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – பெற்றோர்கள் சோகம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:23:00 AM (IST)

