» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மோந்தா புயல் எதிரொலி: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!
புதன் 29, அக்டோபர் 2025 10:32:31 AM (IST)
'மோந்தா' புயல் காரணமாக நாகர்கோவில் பெங்களூரு விரைவு ரயில் நாளை (அக்.30) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உரு வான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி ஆந்திர மாநிலத்தில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரை கடந்ததன் காரணமாக பலத்தகாற்று வீசியது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது.
புயல் காரணமாக விமானங்கள், ரயில்கள் உட்பட பல்வேறு போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து நாளை (30ம் தேதி) இரவு 7.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் -பெங்களூரு விரைவு ரயில் வண்டி எண்: 17236 'மோந்தா' புயல் காரணமாக முழுவதுமாக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

