» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆவினில் 10 ரூபாய்க்கு பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் அறிமுகம்

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவினில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் ரூ.10 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.!

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் ஏற்கனவே பாதாம் மிக்ஸ் பவுடர் 200 கிராம் ஜார்களில் உற்பத்தி செய்யப்பட்டு மாதம் ஒன்றுக்கு சுமார் 30000 ஜார்களுக்கு மேலாக உள்ளு+ர் விற்பனை, தலைமை அலுவலகத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள பிற ஒன்றியங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேற்படியான பாதாம்மிக்ஸ் பவுடருக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருவதால் நுகர்வோர்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் தற்போது சிறியளவில் 14பஅ பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் ரூ.10.00 அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முன்னிலையில் 26.08.2025 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் இதுவரை எங்கள் ஒன்றியத்திற்கு அளித்து வரும் ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory