» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை : ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 27, மே 2025 12:32:33 PM (IST)
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13 வரை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 19.05.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 13.06.2025 ஆகும். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
ஐ.டி.ஐ-யில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் தொழில் 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்ப புதிய தொழிற்பிரிவுகள் 1. Advanced CNC Machining Technician 2. Industrial Robotics & Digital Manufacturing மற்றும் 3. Mechanic Electronic Vehicle ஆகிய மூன்று தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/-, பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் மற்றும் 1 செட் காலணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் முதல்வரை நேரில் அணுகவும். 04652- 261463, 9499055806. அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ITI-ல் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
புதன் 28, மே 2025 8:47:25 AM (IST)

நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்: தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. கைது!
புதன் 28, மே 2025 8:43:36 AM (IST)

பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் பயன் பெற சுகாதாரத்துறை அழைப்பு
செவ்வாய் 27, மே 2025 5:48:58 PM (IST)
