» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள லூயிஸ் பிரய்லி அரங்கத்தில் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது தமிழ்நாட்டில் 02.09.2022 முதல் செயல்பட்டு விதவைகள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நமது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட நலிவுற்ற ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி வழங்குதல், சுயத்தொழில் துவங்குதல் வழிகாட்டும் வகையில் DIC, THADCO ஆகிய துறைகளுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கும் மற்றும் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று நடைபெற்ற கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்நல வாரியத்தில் சேர்க்கை முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட நலிவுற்ற ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பதிவு செய்துள்ளார்கள்.
முகாமில் உதவி இயக்குநர் திறன் பயிற்சி லட்சுமிகாந்தன், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்தியேன், மகளிர்திட்டம் உதவி திட்ட அலுவலர் வளர்மதி, துறை அலுவலர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
புதன் 28, மே 2025 8:47:25 AM (IST)

நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்: தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. கைது!
புதன் 28, மே 2025 8:43:36 AM (IST)

பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் பயன் பெற சுகாதாரத்துறை அழைப்பு
செவ்வாய் 27, மே 2025 5:48:58 PM (IST)
