» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

புதன் 28, மே 2025 8:47:25 AM (IST)

குளச்சலில் மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் அதனை ஒழிக்கும்  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு இடங்களில் போதைப்பொருள்கள் சிக்கி வருகின்றன.

இந்தநிலையில் குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லியோன் தலைமையிலான போலீசார் குளச்சல் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரித்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். 

இதையடுத்து மோட்டாா் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒரு பிளாஸ்டிக் கவரில் 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வாணியக்குடி அருகே உள்ள பனவிளையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory