» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
புதன் 28, மே 2025 8:47:25 AM (IST)
குளச்சலில் மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் அதனை ஒழிக்கும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு இடங்களில் போதைப்பொருள்கள் சிக்கி வருகின்றன.
இந்தநிலையில் குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லியோன் தலைமையிலான போலீசார் குளச்சல் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரித்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார்.
இதையடுத்து மோட்டாா் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒரு பிளாஸ்டிக் கவரில் 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வாணியக்குடி அருகே உள்ள பனவிளையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்: தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. கைது!
புதன் 28, மே 2025 8:43:36 AM (IST)

பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் பயன் பெற சுகாதாரத்துறை அழைப்பு
செவ்வாய் 27, மே 2025 5:48:58 PM (IST)
