» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!
சனி 17, மே 2025 3:44:44 PM (IST)

நாகர்கோவில் அருகே மதுபோதையில் குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டாறு கம்பளம் பகுதியில் மதுரையை சேர்ந்த செல்வராஜ் (30), சாட்டை அடித்துக் கொண்டு தர்மம் எடுத்து வந்தார். இவர் நேற்று மாலை குடிபோதையில் வடிவீஸ்வரம் நீராளி கரை குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
குளிக்க சென்றவர் இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. குளத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை மீண்டும் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் துரிதமாக செயல்பட்டு 15 நிமிடங்களுக்குள் குளத்தில் கிடந்தவரை பிணமாக மீட்டனர். இவருக்கு சாந்தி (28) என்ற மனைவியும் 5 வயது, மற்றும் 9 வயதில் இரண்டு மகன்களும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)
