» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை
சனி 17, மே 2025 11:01:27 AM (IST)
குமரியில் சுற்றுலா வந்த சென்னை தனியார் நிறுவன ஊழியரின் காரில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணப்பையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தனியார் நிறுவன ஊழியர் அழகிய நம்பி (56). சில நாட்களுக்கு முன் இவர் குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க காரில் வந்தனர். திருமணத்தில் பங்கேற்ற பின் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். திரிவேணி சங்கமம் கடற்கரை காந்தி மண்டபம் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்றனர். திரும்பி வந்த போது காரில் இருந்த கைப்பையை காணவில்லை.
அதில் 15 பவுன் நகைகள், ரூ.26 ஆயிரம் இருந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 65 ஆயிரமாகும். அழகிய நம்பி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார், பார்க்கிங் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அழகிய நம்பி அவசரத்தில் கார் கதவை லாக் செய்யாமல் சென்றதை கவனித்து மர்மநபர்கள் கைப்பையை திருடியது தெரிந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)


