» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை
சனி 17, மே 2025 11:01:27 AM (IST)
குமரியில் சுற்றுலா வந்த சென்னை தனியார் நிறுவன ஊழியரின் காரில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணப்பையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தனியார் நிறுவன ஊழியர் அழகிய நம்பி (56). சில நாட்களுக்கு முன் இவர் குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க காரில் வந்தனர். திருமணத்தில் பங்கேற்ற பின் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். திரிவேணி சங்கமம் கடற்கரை காந்தி மண்டபம் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்றனர். திரும்பி வந்த போது காரில் இருந்த கைப்பையை காணவில்லை.
அதில் 15 பவுன் நகைகள், ரூ.26 ஆயிரம் இருந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 65 ஆயிரமாகும். அழகிய நம்பி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார், பார்க்கிங் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அழகிய நம்பி அவசரத்தில் கார் கதவை லாக் செய்யாமல் சென்றதை கவனித்து மர்மநபர்கள் கைப்பையை திருடியது தெரிந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் கடிதம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 12:10:56 PM (IST)
