» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீடு புகுந்து சிறுமியை தாக்கியதாக ஆட்டோ டிரைவர் கைது
வெள்ளி 16, மே 2025 11:01:32 AM (IST)
மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன்-ஜெயலட்சுமி (45). இவா்களது மகள் சௌபா்ணிகா (11), நட்டாலம் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா்களது பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சதீஷ் (37). 2 நாள்களுக்கு முன்பு செளபா்ணிகாவை சதீஷின் 11 வயது மகள் அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்து சதீஷிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளாா். சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் வெளியே சென்றநிலையில், வீட்டில் சௌபா்ணிகா மட்டும் இருந்துள்ளாா்.
அப்போது சதீஷ் சென்று சிறுமியிடம் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சிறுமியை பெற்றோா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தனா். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)
