» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொது சுகாதாரதுறை திட்ட கட்டிட பணிகள்: குமரி மாவட்டத்திற்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு!
செவ்வாய் 13, மே 2025 12:02:15 PM (IST)
குமரி மாவட்டத்திற்கு 15 வது நிதி குழு மூலம் பொது சுகாதார துறைக்கு புதிய கட்டிட பணிகளுக்கு ரூ.10 கோடியே 25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இரண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களுக்கு தலா ரூ.150 இலட்சம் நிதி வழங்கி தோவாளை வட்டாரத்திற்குட்பட்;ட அருமநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், கிள்ளியூர் வட்டாரத்திற்குட்பட்ட உண்ணாமலைகடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொல்லங்கோடு, அழகப்பபுரம், பளுகல், ஓலவிளை ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கூடுதல் கட்டிடத்திற்கு ரூ.75 இலட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செம்மன்காலை, வில்லுக்குறி -1, அம்பாலகடை, அண்டூர், மாத்தூர் ஆகிய 5 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்ட ரூ.45 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பைங்குளம், தேவிகோடு, புத்தன்துறை (கிள்ளியூர்), கீழகிருஷ்ணன்புதூர் ஆகிய 4 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடபணி தொடங்குவதற்கு தலா ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்டிட பணிகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகள் மூலம் விரைவில் செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)
