» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)
நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 போலி சாமியார்களை போலீசார் கைது செய்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லை சோதனை சாவடிகளில் கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ்சில் நெய்யாற்றின்கரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாமியார் போல் உடை அணிந்திருந்த 2 பேர் வைத்திருந்த துணி பைகளை சோதனை செய்த போது அதில் தலா 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், இருவரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பரிமல் மண்டல், பஞ்சனன் மண்டல் என்பதும், சாமியார் வேடத்தில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை கடத்தி கேரளாவில் யாருக்கு சப்ளை செய்ய திட்டமிட்டனர் என்பது தொடர்பாக 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக நெய்யாற்றின்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)
