» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஹஜ் யாத்திரை சிறப்பு தடுப்பூசி முகாம்: உடல் தகுதி சான்றுகள் வழங்கப்பட்டது!
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:00:56 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்லும் யாத்திரகளுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள இருக்கும் ஹஜ் யாத்திரிகள் 65 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இதற்கான தடுப்பூசி முகாம் இன்று (28.04.2025) கிருஷ்ணன்கோவில் மாவட்ட சுகாதார அலுவலக, தடுப்பூசி கூடத்தின் மேல்மாடியில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் அரசு பொதுநல மருத்துவர்கள் கலந்துகொண்டு உடல் தகுதி பரிசோதனைகள் மேற்கொண்டு உடல் தகுதி சான்றுகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் தமிழ்நாடு அரசால் கன்னியாகுமரி மாவட்டதிற்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளவதற்காக அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு QMMV (மெனிஞ்ஜோகொக்கல் மெனிஞ்ஜிட்டிஸ் தடுப்பூசி) மற்றும் SIV (சீசனல் இன்ப்ளூயன்சா தடுப்பூசி) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மூன்று வயதிலிருந்து 65 வயது வரை உள்ள ஹஜ் பயணிகளுக்கு QMMV மற்றும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு SIV, QMMV மற்றும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 3, மே 2025 8:31:59 AM (IST)
