» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு

சனி 3, மே 2025 8:31:59 AM (IST)

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் மே 8-ம் தேதி முதல்  பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் "பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் கூட்டத்தை கையாளுவதற்காகவும், பின்வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நான்கு கூடுதல் இருக்கை வகுப்பு பெட்டிகளுடன் அதிகரிக்கப்படுகின்றன. 

இதனால், இவை 20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலாக இயக்கப்படும். ரயில் எண் 20627/20628 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 2025 மே 08 முதல் இரு திசைகளிலும் 4 வந்தே பாரத் இருக்கை வகுப்பு பெட்டிகளுடன் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory