» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் வருகிற மே 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

நெல்லையிலிருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு தினசரி நான்கு முறை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. 12 பெட்டிகளை மட்டும் கொண்டு இயக்கப்படும் இந்த ரயிலில் ஆயிரக்கணக் கானோர் பயணம் செய்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு சென்று திரும்புவோர் இதனால் கடும் அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று இந்த ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.  மதுரையில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் அவர் இது குறித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து இந்த ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே முதன்மை மேலாளர் (இயக்கம் ) உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory