» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)
சிறந்த படிப்பாளிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திருநெல்வேலியில் உள்ள சட்டக் கல்லூரியைப் பயன்படுத்திக் கொள்ளவும் என அமைச்சர் ரகுபதி பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

இன்று ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று சென்னையிலும், மதுரையிலும் இருக்கும் 2 பெண் நீதிபதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எப்படியும் படித்து முன்னேறி விடுவார்கள். அதனால் எந்த விதமான கவலையும் கிடையாது. எந்த இடத்தில் பார்த்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், படித்தவர்களாக வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
கன்னியாகுமரியிலும் ஒரு தனியார் சட்டக் கல்லூரி உள்ளது. ஆனால் அங்கு கட்டணம் அதிகம் என்று சொன்னீர்கள். நெல்லையில் அரசு சட்ட கல்லூரி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி வேண்டும் என்பது அரசின் கொள்கைதான். ஆனால் அது கொள்கை அளவில் இருக்கிறதே தவிர, நிதிநிலையின்படி அதை நிறைவேற்ற இயலாத சூழலில் இருக்கிறோம். நிதி நிலைமை சரியானால் நிச்சயமாக எல்லா மாவட்டங்களுக்கு சட்டக் கல்லூரி கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா ஏப்.28-ம் தேதி துவக்கம்!
சனி 26, ஏப்ரல் 2025 11:06:05 AM (IST)

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)

குளங்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி : கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை!
புதன் 23, ஏப்ரல் 2025 4:01:54 PM (IST)
