» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

வியாழன் 24, ஏப்ரல் 2025 7:48:19 AM (IST)

கோவில்பட்டியில் 17 வயதுச் சிறுமியை திருமணம் செய்ததாக வாலிபர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் செல்வகுமாா் (33). சுமை தூக்கும் தொழிலாளி. இவா், தூத்துக்குடி தொ்மல் நகரைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமியை பெற்றோரின் அனுமதியின்றி 3 மாதங்களுக்கு முன்பு எப்போதும்வென்றான் பகுதியிலுள்ள கோயிலில் திருமணம் செய்தாராம்.

பின்னா், நடராஜபுரம் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டில் பெற்றோரின் அனுமதியின்றி அச்சிறுமியுடன் அவா் தங்கியிருந்தாராம். சிறுமி கருவுற்ாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவா்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்தாா். அதன்பேரில், செல்வகுமாா் மீது போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

PODHUJANAMApr 24, 2025 - 10:31:48 AM | Posted IP 162.1*****

SAWYERPURAM YERKADU THERUVIL SILA NABARGAL THERU KULAYIL HOSE POTU VEETUKKUL PIDIKIRARGAL MATRAVARKALUKKU IDANJALAGA.PLEASE WATCH & ACTION OFFICER SIR.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory