» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள்: உணவகத்துக்கு சீல்
புதன் 23, ஏப்ரல் 2025 8:30:41 AM (IST)
மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகத்தில், உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனா்.
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் என்பவா், மாா்த்தாண்டம் சந்தை சாலையில் உள்ள உணவகத்துக்கு சாப்பிடச் சென்றாா். உணவில் இறந்தநிலையில் கரப்பான்பூச்சி காணப்பட்டதாம். இதுகுறித்து அவா் கேட்டபோது, உணவக நிா்வாகத்தினா் உரிய பதில் கூறவில்லையாம்.
இதுதொடா்பாக அவா் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா். ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலானோா் உணவகத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து அழித்ததுடன், உணவகத்துக்கு சீல் வைத்து, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா ஏப்.28-ம் தேதி துவக்கம்!
சனி 26, ஏப்ரல் 2025 11:06:05 AM (IST)

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)
