» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:14:17 PM (IST)
கன்னியாகுமரி அருகே திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த இளைஞர் அரவிந்த் (26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு அந்த சிறுமி அங்குள்ள வலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமியின் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளார். பின்னர் சிறுமியிடம் நைசாக பேசி அந்த பகுதியில் உள்ள நூலக கட்டிடம் அருகே அழைத்து சென்று திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அரவிந்தை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அரவிந்த் நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈஸ்டர் பண்டிகை: விஜய்வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 19, ஏப்ரல் 2025 12:30:49 PM (IST)

திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவில் வருமா? பயணிகள் கோரிக்கை!
சனி 19, ஏப்ரல் 2025 9:07:05 AM (IST)

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:18:54 AM (IST)

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் பராமரிப்பு பணிகள் : ஆட்சியர் ஆய்வு
வியாழன் 17, ஏப்ரல் 2025 3:18:39 PM (IST)

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் அழகுமீனா பங்கேற்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 10:42:01 AM (IST)

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை : முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
புதன் 16, ஏப்ரல் 2025 8:44:09 PM (IST)
