» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:18:54 AM (IST)
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்ஆய்வாளர்கள் (SI) தாலுகா பதவிகளுக்கு 933 பணிக்காலியிடங்களும், ஆயுதப்படை பதவிகளுக்கு 366 காலிப்பணியிடங்களுமென மொத்தம் 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏதாவது இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிபதற்கான கடைசி நாள் மே 03 ஆம் தேதி. இத்தேர்வுக்கு விண்ணப்பிபதற்கான இணையதள முகவரி https://www.tnusrb.tn.gov.in/ காவல் சார்ஆய்வாளர்கள் (SI) தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் வைத்து 23.04.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் காவல் சார் ஆய்வாளர் (SI) தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், SMART BOARD வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் (Study Material) இலவசமாக வழங்கப்படும். இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு பாடவாரியாக 25 மாதிரித்தேர்வுகள் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈஸ்டர் பண்டிகை: விஜய்வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 19, ஏப்ரல் 2025 12:30:49 PM (IST)

திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவில் வருமா? பயணிகள் கோரிக்கை!
சனி 19, ஏப்ரல் 2025 9:07:05 AM (IST)

திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:14:17 PM (IST)

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் பராமரிப்பு பணிகள் : ஆட்சியர் ஆய்வு
வியாழன் 17, ஏப்ரல் 2025 3:18:39 PM (IST)

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் அழகுமீனா பங்கேற்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 10:42:01 AM (IST)

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை : முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
புதன் 16, ஏப்ரல் 2025 8:44:09 PM (IST)
