» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 7:37:45 PM (IST)

தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுகவிற்கு நான்கு ஆண்டுகளில்  மிகப்பெரிய எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. 

தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் கூறுகின்றனர். தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஏதாவது தெரிவித்தாரா?  இவர்கள் திரும்பத் திரும்ப இதே கருத்தை வலியுறுத்தியதால் மத்திய அமைச்சர் அமித்ஷா விகிதாச்சார அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் இதனால் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்தார். 

அமைச்சர் பொன்முடி பேசியது அநாகரீகமான செயல். திமுக அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கின்றனர். யார் இந்த தகுதி வாய்ந்த குடும்ப பெண்கள்? மின்சார கட்டணம் 300 மடங்கு உயர்ந்துள்ளது. சொத்து வரி உயர்ந்துள்ளது. பால் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. மக்கள் மனநிலை மாறியுள்ளது தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.


மக்கள் கருத்து

சாமான்யன்Apr 13, 2025 - 08:43:23 PM | Posted IP 162.1*****

ஆசைப்படுவது தப்பில்ல பேராசை பெரு நஷ்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory