» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)



தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட காய்கனி கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர் இன்று பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா நினைவு வளைவு அருகில் இக்கண்காட்சி நடைபெற்றது. இதில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, தர்பூசணி, பூசணிக்காய் மற்றும் அலங்காரப் பூச்செடிகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இது அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது.

மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் கல்வி மற்றும் இயற்கை வளத்தில் முன்னோடியாக இருப்பது போல், வாக்களிப்பதிலும் 100% எட்டி முதன்மை மாவட்டமாகத் திகழ வேண்டும். இதற்காகவே மணல் சிற்பங்கள், கிராமியக் கலைகள் மற்றும் இத்தகைய புதுமையான கண்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்."

இந்த நிகழ்வின் போது, தேர்தல் பொதுப் பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குந நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory