» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)

கேரளாவில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 29 ந் தேதி நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா-பாரசாலா ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண்.16127 நாகர்கோவில் டவுன்-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் டவுனில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 29-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16128 குருவாயூர்-நாகர்கோவில் டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயிலானது குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நாகர்கோவில் டவுனில் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் செல்கிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மங்களூரு சென்டிரலில் இருந்து மார்ச் 28-ந்தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் 16649 திருவனந்தபுரம் சென்டிரல்-கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)


.gif)