» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தமிழ் ஆலய பிரதிஷ்டை விழாவில் கன்னியாகுமரி பேராயர் செல்லையா பங்கேற்றார்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு சலப்புரத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் தமிழர்களால் புதிதாக கட்டப்பட்ட கிறிஸ்துநாதர் தமிழ் ஆலயத்தின் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
விழாவிற்கு சி.எஸ்.ஐ. மலபார் திருமண்டல பேராயர் ராய்ஸ் மனோஜ் விக்டர் தலைமை தாங்கி புதிய தமிழ் ஆலயத்தை ஜெபித்து பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். கோழிக்கோடு குருவானவர் பிரைட் ஜெய்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி பேராயர் செல்லையா, திருநெல்வேலி திருமண்டல லே செயலர் ஜெயசிங், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
புதிய தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா சிறப்பு ஆராதனையில் பாடகர்குழு ஒருங்கிணைப்பாளர் சாலமோன் தலைமையில் பாளையங்கோட்டை "ஸ்கைலார்க்" பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்களைப் பாடினர். பாடகர் குழு தலைவர் ஜாண் மற்றும் ஜாஸ்பர் ஆர்கன் இசை இசைத்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு மலபார் பேராயர் ராய்ஸ் மனோஜ் விக்டர் நினைவு பரிசு வழங்கினார். கோழிக்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.ராகவன், மாநகராட்சி மேயர் டாக்டர் பீனா பிலிப், மலபார் திருமண்டல குருத்துவ செயலர் ஜேக்கப் டேனியல், பொதுச் செயலாளர் கென்னட் லாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சபை மக்கள் அனைவருக்கும் இனிப்பு பார்சல் வழங்கப்பட்டது. நிறைவாக விழாக்குழு செயலர் சாலமோன் நன்றி கூறினார்.
விழாவில் கோழிக்கோடு மறைமாவட்ட அலுவலகப் பொறுப்பாளர்கள், சலப்புரம் பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினர்கள், மற்றும் தமிழகத்தின் பல்வேறு திருமண்டலங்களில் இருந்தும் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:37:05 PM (IST)

சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)

குமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கல் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 11:02:22 AM (IST)

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)


.gif)