» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!

சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)



கோழிக்கோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தமிழ் ஆலய பிரதிஷ்டை விழாவில் கன்னியாகுமரி பேராயர் செல்லையா பங்கேற்றார்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு சலப்புரத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் தமிழர்களால் புதிதாக கட்டப்பட்ட கிறிஸ்துநாதர் தமிழ் ஆலயத்தின் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

விழாவிற்கு சி.எஸ்.ஐ. மலபார் திருமண்டல பேராயர் ராய்ஸ் மனோஜ் விக்டர் தலைமை தாங்கி புதிய தமிழ் ஆலயத்தை ஜெபித்து பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். கோழிக்கோடு குருவானவர் பிரைட் ஜெய்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி பேராயர் செல்லையா, திருநெல்வேலி திருமண்டல லே செயலர் ஜெயசிங், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். 

புதிய தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா சிறப்பு ஆராதனையில் பாடகர்குழு ஒருங்கிணைப்பாளர் சாலமோன் தலைமையில் பாளையங்கோட்டை "ஸ்கைலார்க்" பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்களைப் பாடினர். பாடகர் குழு தலைவர் ஜாண் மற்றும் ஜாஸ்பர் ஆர்கன் இசை இசைத்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு மலபார் பேராயர் ராய்ஸ் மனோஜ் விக்டர் நினைவு பரிசு வழங்கினார். கோழிக்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.ராகவன், மாநகராட்சி மேயர் டாக்டர் பீனா பிலிப், மலபார் திருமண்டல குருத்துவ செயலர் ஜேக்கப் டேனியல், பொதுச் செயலாளர் கென்னட் லாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சபை மக்கள் அனைவருக்கும் இனிப்பு பார்சல் வழங்கப்பட்டது. நிறைவாக விழாக்குழு செயலர் சாலமோன் நன்றி கூறினார்.

விழாவில் கோழிக்கோடு மறைமாவட்ட அலுவலகப் பொறுப்பாளர்கள், சலப்புரம் பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினர்கள், மற்றும் தமிழகத்தின் பல்வேறு திருமண்டலங்களில் இருந்தும் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory