» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)
திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் அமிர்த் பாரத் ரயிலின் கால அட்டவணையை மாற்ற வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்த அம்ரித் பாரத் ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 11:45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. நள்ளிரவு நேரத்தில் ரயில் நிலையம் செல்வதிலும், அங்கிருந்து ஊர்களுக்குத் திரும்புவதிலும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அச்சம் உள்ளது. நள்ளிரவு நேரத்தில் போதிய பேருந்து அல்லது இதர போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் கூறியுள்ளதாவது: நேர மாற்றம்: இந்த ரயிலை திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் சுமார் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்த ரயிலை இரணியல் ரயில் நிலையத்தில் இரண்டு மார்க்கங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில் - மங்களூரு ரயில்: இதேபோல் நாகர்கோவில் - மங்களூரு இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில் 19 நிறுத்தங்களில் நின்று செல்வதால், மற்ற ரயில்களை விட மெதுவாகச் செல்கிறது. எனவே இதையும் இரவு நேர ரயிலாக மாற்றியமைக்க வேண்டும்.
முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயில்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ரயில்வே நிர்வாகம் இந்த நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, கால அட்டவணையில் மாற்றங்களைச் செய்தால் குமரி மாவட்ட மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:25:12 PM (IST)

குமரி மாவட்டக் கல்லூரிகளில் ரூ.11 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:43:44 AM (IST)

