» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாகக் கேரளாவுக்குக் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் தொடர் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட எல்லை வழியாகக் கனிமங்களை ஏற்றிச் செல்ல மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அதிரடித் தடை விதித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி வழியாகக் கேரளாவிற்கு கனிமங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.ஏப்ரல் 7: தோவாளை வட்டம் திருப்பதிசாரம் பகுதியில் நடந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் ஏப்ரல் 9 அன்று உயிரிழந்தார். அன்றைய தினமே வில்லுக்குறி பகுதியிலும் விபத்து நேரிட்டது.
ஏப்ரல் 9: தக்கலை காவல் நிலையம் அருகே அதிவேகமாகச் சென்ற சரக்கு வாகனம் (TN 18 BH 2436), இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சட்டம் - ஒழுங்கு பாதிப்பு: கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகவும், ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும் இயக்கப்படுவதால் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நாகர்கோவில் – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும் முக்கியச் சாலையாக உள்ளது. மாற்று வழி இல்லாத நிலையில், மார்த்தாண்டம் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனிம வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
விபத்தில்லாச் சாலை போக்குவரத்தை உறுதி செய்யவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் மாவட்ட ஆட்சியர் பின்வரும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்:
"களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான (NH 47) தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முழுமையாக முடிந்து செயல்பாட்டிற்கு வரும் வரை, கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளா மாநிலத்திற்கு கனரக வாகனங்கள் மூலம் கனிமங்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது."
இந்தத் தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். பலமுறை எச்சரித்தும் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இந்த உத்தரவு ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் : சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்
செவ்வாய் 26, மே 2026 12:05:02 PM (IST)

குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!
திங்கள் 25, மே 2026 5:14:10 PM (IST)

குடும்பத் தகராறில் மனைவியைக் குத்திக் கொன்று கணவன் தற்கொலை: மகன் கண்முன்னே கொடூரம்!
திங்கள் 25, மே 2026 5:00:14 PM (IST)

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்: 339 மனுக்கள் குவிந்தன!
திங்கள் 25, மே 2026 4:09:48 PM (IST)

மோதிரமலை பகுதியில் பாலம் கட்டும் பணி தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
திங்கள் 25, மே 2026 10:29:28 AM (IST)

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)


