» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)


விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 பேருக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மகேஷ் (23). இவர் சில மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தவர். கடந்த 16-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, காவல்கிணறு ரயில்வே மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்தார்.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். "மண்ணோடு மண்ணாக விரும்புவில்லை, அவர் உறுப்புகள் மூலம் பிறர் வாழட்டும்" என்ற குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. இவை திருச்சி, காரைக்குடி, மதுரை மற்றும் நாகர்கோவில் மருத்துவமனைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory