» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொங்கல் பரிசுத்தொகுப்பு: விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல்!
சனி 4, ஜனவரி 2025 5:42:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்குவதற்காக மதுரையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தமிழக முதலமைச்சர் 2025ம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் முழுக்கரும்பு சேர்த்து வழங்கப்படும் என ஆணை வெளியிட்டுள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழு வால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 577849 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட உள்ள கரும்பு கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் அண்டை மாவட்டமான மதுரையில் கரும்பு விளைவிக்கப்படும் இடங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 09.01.2025 முதல் 13.01.2025 வரை வழங்கப்பட உள்ள நிலையில் அதற்காக 03.01.2025 முதல் குடும்ப அட்டைதாரர்களின் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
