» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுனருக்கு எடப்பாடியார் ரூ.1லட்சம் நிதி உதவி!
வெள்ளி 29, நவம்பர் 2024 8:04:10 AM (IST)

தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரூ.1லட்சம் நிதி உதவியை வழங்கினார்.
தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பன் வாடகைக்கு ஆட்டோ எடுத்து தொழில் செய்து வந்துள்ளார். தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திலும் பொறுப்பாளராக செயல்பட்டும் வந்துள்ளார். இவரது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பரிந்துரையின் பெயரில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வழங்கி வரும் நலிந்த தொழிலாளர்களுக்கான நிதி உதவியின் கீழ் தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பனை நேரில் வரவழைத்து ₹1,00,000/- ரூபாய் நிதி உதவியை வழங்கி உதவியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் இதையையே முன் பணமாக வைத்து தனது பெயரில் சொந்தமாக ஓர் ஆட்டோ எடுத்து தற்போது அதன் மூலமாக தொழில் செய்து வருகிறார். அதிமுக சார்பாக வழங்கப்பட்டுள்ள இந்த நிதி உதவியை தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு காரணமாக இருந்த மாவட்ட செயலாளர் சண்முகநாதனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வன்னம் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

சங்கர பாண்டியன்Nov 29, 2024 - 03:04:49 PM | Posted IP 172.7*****