» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

சனி 19, அக்டோபர் 2024 3:07:01 PM (IST)



வேப்பலோடை கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. 

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 6வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 19 கிராம ஊராட்சிகளில் அக்-15ம் தேதி முதல் அக்.19ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம்.ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்,  வேப்பலோடை கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் முனியம்மாள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி,  ஓவர்சீர் அசோக்குமார். ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஊராட்சி செயலர் செந்தில் குருநாதன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதில் பஞ்.துணைத் தலைவர் சிவஞானசுந்தரி, வார்டு உறுப்பினர்கள் லதா,  சிந்தாமணி,  முத்துமாரி, கிராம வள பயிற்றுநர்கள் மாரி செல்வி, ஆறுமுககனி, முத்துமணி, பிச்சம்மாள், முத்து முனீஸ்வரி, மீனாட்சி, பணித்தள பொறுப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதனூர்,  கீழமங்கலம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


மக்கள் கருத்து

Veppalodai.....Oct 20, 2024 - 07:16:14 AM | Posted IP 172.7*****

நேர்மையான பஞ்சாயத்து தலைவி...... 🤩

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory