» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கத்தியைக் காட்டி மிரட்டி பைக், செல்போன் பறிப்பு : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் அட்டகாசம்!

சனி 19, அக்டோபர் 2024 10:54:55 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன், பைக்கை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் ஜே.எஸ்., நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் குகன் (26), இவர் அங்குள்ள உரத் தொழிற்சாலையில் கிளார்க் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர் ராஜேஷ் என்பவரை மோட்டார் பைக்கில் மடத்தூரில் கொண்டு விட்டுவிட்டு மீண்டும் கிருபை நகர் வழியாக முத்தையாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவரது பைக்கை பறித்து சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த குகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

peopleOct 21, 2024 - 04:59:41 PM | Posted IP 162.1*****

police night patrolling should be intensified

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory