» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அந்தோணியார்புரம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை!
புதன் 31, ஜூலை 2024 4:50:54 PM (IST)
தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள அந்தோணியார்புரம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்தோணியார்புரத்தில் நான்கு வழிச் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 7 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படாதது மிகவும் வேதனையாக உள்ளது. ஆகவே தூத்துக்குடி - நெல்லையை இணைக்கக் கூடிய இந்த முக்கியமான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இரண்டு சுங்க சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனியாக ஒரு சாலை வசதி ஏற்படுத்தி தர உத்திரவிட வேண்டும். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சாலையில் தற்பொழுது புதிய மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தூசி மற்றும் புழுதி பறந்து காற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஆகவே இதனை தடுக்க அப்பகுதியில் தண்ணீர் தெளிப்பதோடு விஞ்ஞான முறையில் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
அது என்ன செய்தி ?Jul 31, 2024 - 09:58:25 PM | Posted IP 162.1*****
ஹமாஸ் தலைவரா? ஹமாஸ் ஒரு தீவிரவாதி இயக்கம் தானே, "ஹமாஸ் தீவிரவாதி தலைவன் பலி" அப்படி தலைப்பு செய்தி போடுங்க.
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)


Thoothukudi kaaranJul 31, 2024 - 11:51:54 PM | Posted IP 162.1*****