» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தரமற்ற சாலைப் பணிகள்: பொதுமக்கள் போராட்டம் ; தூத்துக்குடியில் பரபரப்பு!!
திங்கள் 1, ஏப்ரல் 2024 10:26:08 AM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் சாலைப் பணிகள் நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ராமசாமிபுரம் முதல் தெரு, பக்கிள்புரம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தரமற்ற வகையில் சாலைப் பணிகள் நடப்பதாக கூறி சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், "ராமசாமிபுரம் முதல் தெரு, பக்கிள்புரம் பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது. இதனை முறையாக அமைக்கப்படவில்லை. மேலும் பல வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை.
இப்பணிகளை நிறைவேற்றாமல் அவசர கதியில் சாலைகள் அமைக்கப்படுகிறது. சாலைப் பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், கழிவு நீர் கால்வாய், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கிய பின் தரமான முறையில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
சிதம்பர நகர் ஏரியாApr 1, 2024 - 12:50:09 PM | Posted IP 162.1*****
சிதம்பரநாகரில் அரைகுறை சாலை அப்படியே மண் , மணல் கொட்டி போய்ட்டாங்க , மாநகராட்சி எல்லாம் அறை குறை பயலுக . மேயர் ஜெகன் அவர் ஓட்டு கேக்க ஊர் சுற்ற போயிட்டாரு. வேஸ்ட்
மேலும் தொடரும் செய்திகள்

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)


.gif)
புவனேந்திரன்Apr 4, 2024 - 06:54:52 AM | Posted IP 162.1*****