» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசு அறிவித்த குழுவில் சசி தரூர் பெயர் இடம்பெற்றது நேர்மையற்றது: ஜெய்ராம் ரமேஷ்
சனி 17, மே 2025 4:49:28 PM (IST)

பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று விளக்கம் அளிப்பதற்கு மத்திய அரசு எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை அறிவித்துள்ளது.
இந்த குழுவை அமைப்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் பெயரை வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி 4 எம்.பி.க்கள் பெயரை வழங்கியுள்ளது. ஆனால் இன்று குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் இடம் பிடித்துள்ளவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், நாங்கள் கொடுத்த பெயரை தவிர்த்துவிட்டு மற்றொரு பெயரை அறிவித்துள்ளது நேர்மையற்றது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: எங்களிடம் பெயர் கேட்கப்பட்டது. நாங்கள் கொடுத்த பெயர் குழுவில் இடம் பெறும் என எதிர்பார்த்தோம். கட்சியினால் கொடுத்த பெயர்கள் இடம்பெறும் என்று நம்பினோம். ஆனால், PIB வெளியிட்ட அறிக்கையை நாங்கள் பார்க்கும்போது, ஆச்சர்யம் அடைந்தோம். இப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது.
நான்கு பெயர் கேட்கப்பட்டு, நான்கு பெயர் கொடுக்கப்பட்டது. ஆனால் மற்றொரு பெயரை அறிவிப்பது அரசு தரப்பில் நேர்மையற்றது. அரசு முன்னதாக முடிவு செய்திருந்தாலும் கூட கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி மற்றும் கார்கேயிடம் பேசியிருக்கலாம். நாங்கள் எங்களுடைய நான்கு பெயர்களை மாற்றப்போவதில்லை. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், ராஜா பரார் மற்றும் நாசர் ஹுசைன் ஆகிய நான்கு எம்.பி.கள் பெயரை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!
வெள்ளி 23, மே 2025 5:29:42 PM (IST)

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது: இந்தியா உறுதி!
வெள்ளி 23, மே 2025 12:13:57 PM (IST)

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!
வியாழன் 22, மே 2025 4:34:48 PM (IST)

தமிழகம் உட்பட நாடு முழுதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
வியாழன் 22, மே 2025 4:03:10 PM (IST)

செங்கல் மீதான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும்: நிதி அமைச்சருடன் கனிமொழி எம்பி சந்திப்பு
வியாழன் 22, மே 2025 12:15:54 PM (IST)

மோடி அரசு ஆளுநர்களை தவறாக பயன்படுத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதன் 21, மே 2025 4:25:15 PM (IST)
