» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடி வரிப்பகிர்வு - மத்திய அரசு விடுவிப்பு
வெள்ளி 10, ஜனவரி 2025 5:17:21 PM (IST)
தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடியை வரிப்பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது.
நாட்டில் வசூலாகும் வரி தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி 2025 ஜனவரி மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.31,039 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு ரூ.17,403 கோடியும், மத்தியபிரதேசத்திற்கு ரூ.13,588 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரபிரதேசத்துக்கு ரூ.7,002.52 கோடி, அருணாச்சலபிரதேசத்துக்கு ரூ.3,040.14 கோடி, அசாமுக்கு ரூ. 5,412.38 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சத்தீஸ்கருக்கு ரூ.5,895.13 கோடி, குஜராத்துக்கு ரூ.6,017.99 கோடி, அரியானாவுக்கு ரூ.1,891.22 கோடி, இமாச்சலபிரதேசத்துக்கு ரூ.1,436.16 கோடி, ஜார்க்கண்ட்டுக்கு ரூ.5,722.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு ரூ. 6,310.40 கோடி, கேரளாவுக்கு ரூ.3,330.83 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,637.09 கோடி, உத்தராகண்ட்டுக்கு ரூ.1,934.47 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13,017.06 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலியைக் கொன்று பிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:25:07 PM (IST)

கேரளாவில் பா.ஜனதா ஆட்சியின் நுழைவுவாயில் பாலக்காடு - பிரதமர் மோடி பிரசாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:34:25 AM (IST)

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

மேற்காசிய நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை
சனி 28, மார்ச் 2026 4:10:10 PM (IST)

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!
சனி 28, மார்ச் 2026 12:18:19 PM (IST)

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? சமூக வலைதள வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:49:11 AM (IST)

