» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)



தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.

இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட மறுநாளே அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் தியேட்டர் உரிமையாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory