» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி: பெங்களூரு வாலிபர் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 7:33:10 AM (IST)
தூத்துக்குடி வியாபாரியிடம் ஆன்லைன் முதலீடு மூலம் 19 லட்சம் ரூபாய் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை வியாபாரி தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து எதிர்தரப்பினர் கூறிய விபரங்களை நம்பி, குறிப்பிட்ட வங்கி எண்ணிற்குப் பணம் அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பல தவணைகளாக மொத்தம் 19 லட்சம் ரூபாய் வரை வியாபாரி அனுப்பியுள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பணம் திருப்பி வரவில்லை. அத்துடன் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டு இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி இது குறித்துத் தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவ் மகன் முகேஷ் (36) இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் முகேஷைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வருடாந்திர நிகர லாபம் ரூ.1,337.55 கோடியாக உயர்வு: நிதிநிலை அறிக்கை வெளியீடு!
வியாழன் 16, ஜூலை 2026 5:17:04 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு: இபிஎஸ் அதிரடி!
வியாழன் 16, ஜூலை 2026 3:16:27 PM (IST)

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு: வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 12:21:22 PM (IST)

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி!
வியாழன் 16, ஜூலை 2026 11:38:11 AM (IST)

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: தம்பதி பலி!
வியாழன் 16, ஜூலை 2026 8:46:32 AM (IST)


